சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவம்! உண்மை என்ன? விசாரணையில் நீதிபதி சொன்னது!

பாலிவுட் சினிமாவின் நடிகர் சுஷாந்தி சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் பெரும் சர்ச்சையாக நீதிமன்றம் வரை இது சென்றது. சுஷாந்த் சிங்கின் காதலி என சொல்லப்பட்டு வந்த ரியா மீது இறந்தவரின் அப்பா காவல் துறையில் பல்வேறு புகார் அளித்திருந்தார்.

இவ்வழக்கு விசாரணை பாட்னா நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கு குறித்த விசாரணையில் நீதிபதி ரிஷிகேஷ் ராய் சுஷாந்த் மரணம் துரதிர்ஷ்டவசமானது. திறமையான கலைஞன் அசாதாரணமான சூழலில் மரணமடைந்துவிட்டார். எந்த சூழ்நிலை காரணமாக இந்த மரணம் நிகழ்ந்தது என விசாரிக்க வேண்டும். இந்த மரணம் பற்றி எல்லோருக்கும் கருத்து இருக்கிறது. ஆனால் சட்டத்தின் படியே வழக்க விசாரிக்க முடியும் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!