ட்ராப் ஆனதா சூர்யாவின் அருவா? அதிர்ச்சியில் ரசிகர்கள்.. உண்மை என்ன, முழு விவரம் இதோ..

தமிழ் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் முன்னணி நடிகர் சூர்யா.

இவர் தற்போது சுதா கே. பிரசாத் இயக்கத்தில் சூரரை போற்று படத்தை நடித்து முடித்து வெளிவர காத்திருக்கிறார்.

இப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில் வாடி வாசல் எனும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூர்யா ஒரு படம் நடிக்க போவதாக தகவல்கள் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் இந்த சில படங்களின் படப்பிடிப்பு காரணமாக ஹாரி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யா நடிக்கவிருந்த படம் ட்ராப் ஆகிவிட்டது என சில வதந்திகள் பரவின.

ஆனால் இது முற்றிலும் போய் என தகவல்கள் தெரிவித்துள்ளது. ஆம் இப்படம் ட்ராப் ஆகவில்லை கொஞ்சம் தாமதமாக நடைபெறும் என்று கூறுகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!