சுய விளம்பரத்திற்காக இளைஞரை சிக்க வைத்த நடிகை..!! கடுப்பில் ரசிகர்கள்..!!


விமானத்தில் தன்னை ஒரு நபர் பாலியல் சீண்டலுக்கு உள்ளக்கியதாக கூறி அப்பாவி இளைஞர் ஒருவரை வம்பில் சிக்க வைத்துள்ளார் தங்கல் படத்தில் நடித்த நடிகை ஜாய்ராவாசிம்

நேற்று ஜாய்ரா ஒரு வீடியோவை வெளியிட்டார், ஒரு பெண்ணுக்கு இப்படி நடக்க கூடாது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா..? எப்படி என்னிடம் அவர் அப்படி நடந்துகொண்டார். என்னுடையை பின் புறத்தை தனது காலால் தடவ அவருக்கு அப்படி மனது வந்தது..! இப்படியெல்லாம் ஒரு பெண்ணுக்கு நடக்கவே கூடாது..! என்று கண்ணீர் மல்க பேசி பரபரப்பை கிளப்பினார்.

இது குறித்து, மும்பை போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், அவரது மனைவி என் கணவர் எந்த குற்றமும் செய்யவில்லை. தன்னுடைய மாமாவின் இறுதிசடங்கில் கலந்துகொண்டு விமானம் மூலம் வீடு திரும்பினார் என் கணவர்.

இறுதி சடங்கு வேலைகளால் அவர் தொடர்ச்சியாக 30 மணிநேரம் உறங்கவில்லை. அந்த சோர்வில் தன் முன் இருந்த இருக்கையில் தூக்க கலக்கத்தில் கால் வைத்துள்ளார்.


முன்னே அமர்ந்திருந்த ஜாய்ரா மீது கால் பட்டதும் ஐயோ என்னை மன்னித்துவிடுங்கள் தெரியாமல் பட்டுவிட்டது ஐயம் வெரி சாரி என்று கூறியுள்ளார் அதற்கு ஜாய்ராவும் இட்ஸ் ஒகே என்று கூறியுள்ளார்.

ஆனால், இந்த சம்பவத்தை தன்னுடைய சுய விளம்பரதிற்காக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் ஜாய்ரா. என் கணவர் ஒரு அப்பாவி. அவர் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை கூற அவருக்கு எப்படி மனது வந்தது. நாங்கள் மரியாதையான குடும்பத்தில் வாழ்ந்து வருகிறோம். என் கணவர் எல்லோரையும் மதித்து நடக்க கூடியவர் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

ஒரு வேளை என் கணவர் அவரை பாலியல் ரீதியாக சீன்டியிருந்தால், விமானத்திலேயே கூச்சல் போட்டிருக்கலாம், அருகில் இருந்தவர்களின் உதவியை அவர் நாடியிருக்கலாம். ஒரு பட்டனை தட்டினால் விமான ஊழியர்கள் வந்து நிற்பார்கள், அதை கூட அவர் செய்யவில்லை. இதனை முழுக்க முழுக்க தன் சுய விளம்பரத்திற்காக செய்துள்ளார் அந்த நடிகை என்று குமுறுகிறார் அந்த நபரின் மனைவி திவ்யா.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!