பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க மறுத்த விஜய்! காரணம் இதுதான் – சூப்பர் ஸ்டாரும் நோ சொன்ன கதை

வாத்தி எப்போது வருவார் என விஜய் ரசிகர்கள் தளபதியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கொரோனாவால் படம் தள்ளிப்போனதால் படக்குழுவும் தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் முதலில் நடிக்கவிருந்த விஜய் தான். இயக்குனர் இப்படத்திற்கு ஒருவருடம் கால்ஷுட் கேட்டதால் அவ்வளவு காலம் கொடுக்க முடியாது, நான் வேறோரு புது ரூட்டில் போய்க்கொண்டிருக்கிறேன். இது எனக்கு சௌகரியமாக இருக்கிறது என கூறி மறுத்துவிட்டாராம்.

அதே போல தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுபை அணுகியபோது இரண்டாம் ஹீரோவாக நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். மேலும் ரூ 20 கோடி சம்பளம் வாங்கும் மகேஷ் பாபு இப்படத்திற்கு குறைவாக சம்பளம் பேசியதும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படத்தை தாய்லாந்து நாட்டில் செட் அமைத்து நடத்தி வந்த வேளையில் கரோனா ஊரடங்கால் 60 சதவீத படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!