நான்காவது முறையாக தள்ளி வைக்கப்பட்ட ஆஸ்கர் விருது விழா.. வெளிவந்த புதிய தேதி

உலக அளவில் திரையுலகினர்கள் தங்களது திறமைக்கு பெருமையாக கருதும் ஆஸ்கர் விருது கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

93ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு, அதாவது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடத்த திட்டமிட்டிருந்த இந்த விழா தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.

இதனால் தற்போது ஆஸ்கர் விருது வழங்கும் விழா முறையாக ஆஸ்கர் வரலாற்றில் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!