கஜினி திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இது தான் முக்கிய காரணம், நடிகர் சூர்யா கூறிய அதிர்ச்சி தகவல்..

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கஜினி. இப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டானது. மேலும் இப்படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்தனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யா அவர் தயாரிப்பில் வெளியாகியுள்ள பொன்மகள் வந்தால் திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக லைவ்வகை வந்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் கஜினி திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை கூறுமாறு கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த சூர்யா “அந்த கதாபாத்திரம் மிகவும் சவாலானது, யோசிக்க வைக்கும் திறனையும் கொடுத்ததால் அந்த ஸ்கிரிப்ட்டை நான் தேர்ந்தெடுத்தேன்.

மேலும் அந்த கதாபாத்திரத்திற்காக தலையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் நடைமுறை வாழ்க்கையை அறிந்து கொண்ட பின்னரே, இதில் இறங்கியதாகவும் கூறியுள்ளார். மேலும் இப்படம் நாங்கள் எதிர்ப்பார்த்ததை விட மிக பெரிய வெற்றியடைந்தது எனவும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!