டீக்கடைக்காரர் ஒருவரின் ஆசையை நிறைவேற்றிய தல அஜித், நெகிழ்ச்சி தகவல்

அஜித்குமார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். இவரது திரைப்படம் வெளியானால் அதனை திருவிழா போல் கொண்டாடுவார்கள் அவரின் ரசிகர்கள்.

சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படங்கள் மிக பெரிய வசூல் சாதனைகளை செய்தது.

தற்போது இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார். மேலும் கொரோனா காரணத்தினால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மே 1 இவரது பிறந்தநாள் என்பதால் ட்விட்டரில் இவரின் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினர்.

இதில் 24 மணி நேரத்தில் 9 மில்லியன் டுவிட்ஸ் செய்து தென்னிந்திய நடிகர்களில் 2வது இடம், தமிழ நடிகர்களில் முதலிடமும் பெற்றுள்ள்னர்.

இது ஒரு புறம் இருக்க அஜித் பைக்கில் பூனேவில் இருந்து சென்னை வந்த போது ஒரு நெகிழ்ச்சி நிகழ்வு நடந்துள்ளது.

அதை அஜித்தின் நண்பர் ஒருவர் ஷேர் செய்துள்ளார். வரும் வழியுல் டீ கடைக்கார்ர் அஜித்துடன் புகைப்படம் எடுக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது அதை புரிந்துக்கொண்ட அஜித் புகைப்படம் எடுத்து அதை பிரிண்ட் போட்டு அனுப்பியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!