பேரன் முகத்தைகூட பார்க்க முடியவில்லை – சாருஹாசன் கவலை

வெளிநாட்டில் இருந்து வந்த பேரன் முகத்தைகூட பார்க்க முடியவில்லை என்று சாருஹாசன் கவலை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் – சுகாசினியின் மகன் நந்தன் இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பியதால் முன்னெச்சரிக்கையாகத் தன்னைத் தானே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார். இன்றுடன் அவர் தனிமைப்படுத்திக் கொண்டு 11 நாட்கள் ஆகின்றன.

தனிமையில் இருக்கும் மகனுடன் சுகாசினி பேசும் வீடியோ பதிவு பரபரப்பானது. தனது பேரன் தனிமைப்படுத்திக் கொண்டது தொடர்பாக நடிகர் சாருஹாசன் கூறியிருப்பதாவது, “என் பேரன் நந்தன் லண்டனிலிருந்து வந்தால், தாத்தா என்று என்னைப் பார்க்கத்தான் வருவான். இப்போது அவன் வந்து 10 நாளாச்சு. முகத்தைக் கூட பார்க்கவில்லை. கஷ்டம்தான். ஆனால், கொரோனாவை விரட்டியடிக்க இது தேவைதான்” என்று தெரிவித்துள்ளார்.

சாருஹாசன் பேசியுள்ள வீடியோவையும், நந்தன் தனிமைப்படுத்திக் கொண்ட வீடியோ பதிவையும் இணைத்து, தமிழக அரசு கரோனா விழிப்புணர்வு வீடியோவாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை சுகாசினி தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!