இந்தி பாடகருடன் அமலா பால் நெருக்கம்

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால், இந்தி பாடகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

நடிகை அமலா பால், மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங் உடன் நெருக்கமாக இருப்பதாக படங்களுடன் சமூக வலைதளங்களில் புதிய தகவல் வைரலாகி வருகிறது. பவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில், ஒரு பெண்ணை கட்டிப் பிடித்து காதலி என பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், இருப்பது அமலா பால் தான் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். முன்னதாக அமலா பால், தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவர் தன்னை அம்மா போல் பார்த்துக் கொள்கிறார் என்று கூறியிருந்தார். விரைவில் அது குறித்து அறிவிப்பேன் என்றும் பேசியிருந்தார்.

இந்நிலையில் அந்த நபர் பாடகர் பவ்னிந்தர் சிங் தான் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அமலா பால் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!