எனக்கு அப்படியிருக்க பிடிக்காது, இருக்கவும் மாட்டேன், கௌதம் மேனன் ஓபன் டாக்

கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர். இவர் இயக்கத்தில் ஒரு படம் வருகின்றது என்றாலே மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும்.

ஏனெனில் கௌதம் படம் என்பதற்காக ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது, அப்படித்தான் அத்தனை வருடங்கள் கழித்து வந்தும் எனை நோக்கி பாயும் தோட்டாவிற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் கௌதம் தற்போது படம் இயக்குவது தாண்டி நடிப்பிலும் களம் இறங்கிவிட்டார், இவர் நடிப்பில் சமீபத்தில் ஒரு மலையாள படம் வந்தது.

தற்போது கூட கௌதம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் நடித்துள்ளார், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளார்.

அதில் இவரிடம் உங்களுக்கு தனிமை பிடிக்குமா? என கேட்க ‘எனக்கு தனிமை மட்டும் பிடிக்கவே பிடிக்காது, நான் அப்படியும் இருக்க மாட்டேன்’ என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!