வரி பாக்கி – ஜி.வி.பிரகாஷுக்கு நோட்டீஸ்

சேவை வரி செலுத்த வேண்டும் என்று ஜி.எஸ்.டி., இணை இயக்குனர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார், தனது படைப்புகளின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, ஒரு கோடியே 84 லட்சம் ரூபாயை சேவை வரியாக செலுத்த வேண்டும் என, ஜி.எஸ்.டி., இணை இயக்குனர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நோட்டீசை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஜி.எஸ்.டி., துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!