என் மனைவியை புரிந்து கொள்ள எனக்கு 15 வருடங்கள் ஆனது.. விஜய் சேதுபதி ஓபன் டாக்

தமிழ் திரையுலகில் தனது எதார்த்தமான நடிப்பினால் தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் பிடித்தவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இவர் தற்போது விஜய்க்கு வில்லனாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், லாபம், போன்ற படங்களிலும் மற்றும் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவர் அண்மையில் பிரபல கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட சிறப்பித்துள்ளார். அப்போது விழாவில் பேசிய சேதுபதி தனது சினிமா பயணத்தில் நடந்த சுவாரசியமான பல நிகழ்வுகள் பகிர்ந்து கொண்டார்.

அதில் குறிப்பாக பேசும் போழுது “நான் தொட்டு தாலி கட்டின என் மனைவியை புரிந்து கொள்ள எனக்கு 15 வருடங்கள் ஆனது. பெண்ணை அவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ள முடியாது. அதனால் எந்த ஒரு பெண்ணிடமும் போட்டி போடாதீர்கள், எந்த ஒரு பெண்ணையும் சீப்பாக பேசாதீர்கள் என்று வெளிப்படையாக கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!