ரஜினி, தர்பார் படக்குழுவினரை மேடையில் தாக்கி பேசிய பிரபல தயாரிப்பாளர்

முருகதாஸ் இயக்கிய தர்பார் படம் முழுக்க முழுக்க மும்பையில் படமாக்கப்பட்டிருந்தது. அந்த படம் நஷ்டம் என விநியோகஸ்தர்கள் புகார் கூறி வருகின்றனர்.

இது பற்றி பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் சமீபத்தில் நடைபெற்ற ஒரு படத்தின் விழாவில் விமர்சித்துள்ளார்.

“நீங்கள் மும்பையில் ஷூட்டிங் நடத்தினால் இங்கிருப்பவர்களுக்கு வேலை கொடுப்பது யார்?. முருகதாஸ், யோகி பாபு தவிர படத்தில் பணியாற்றிய மற்றவர்கள் வடஇந்தியர்கள். ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ் வேறு மாநிலத்தவர்கள் என்றாலும் அவர்களை நாம் ஏற்றுக்கொண்டுவிட்டோம்.”

“ஆந்திராவில் படம் நஷ்டமானால் விநியோகஸ்தர்களை அழைத்து பணத்தை பிரித்து கொடுக்கிறார்கள். ஆனால் இங்கு நஷ்டமாகிவிட்டது என்று வீட்டுக்கு போனால் காவல்துறையில் புகார் அளிக்கிறார்கள்,” என கே.ராஜன் பேசியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!