தர்பார் இத்தனை கோடி நஷ்டம், ரஜினியிடம் முறையிடும் விநியோகஸ்தர்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து பொங்கலுக்கு விருந்தாக வந்த படம் தர்பார். இப்படம் வெளிவந்த 4 நாட்களில் 150 கோடிக்கும் மேலாக வசூலித்திருந்தது.

இந்நிலையில் தர்பார் படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலிக்கவில்லை மற்றும் 25 கோடி வரை நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதன் குறித்து செங்கல்பட்டு உள்ளிட்ட சில ஏரியாக்களில் உள்ள விநியோகஸ்த்தர்கள் ரஜினியிடம் முறையிட சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் கூடியுள்ளனர்.

ஆனால் அங்கு ரஜினிகாந்தை சந்திக்க முடியாததால் விரைவில் எந்தெந்த மாவட்டங்களில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தெரிந்து கொண்ட விநியோகஸ்தர்கள் ரஜினி அவர்களிடம் முறையிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த நஷ்டத்திற்கு லைக்கா நிறுவனம் பொறுப்பேற்காது என்று முன்பே ஒப்பந்தத்தில் தெரிவித்திருந்தால் ரஜினியிடம் முறையிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!