சந்தானத்திடம் கெஞ்சிக்கேட்டு கொள்கிறேஎன், இதை மட்டும் செய்யுங்கள், பிரபல தயாரிப்பாளர் மேடையில் வேண்டுக்கோள்

சந்தானம் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காமெடி நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் தில்லுக்கு துட்டு-2, ஏ1 ஆகிய படங்கள் செம்ம ஹிட் அடித்தது.

இதை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் டகால்டி படம் திரைக்கு வரவுள்ளது, இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ராஜன் ஒரு மேடையில் மிகவும் உணர்ச்சிவமாக பேசியுள்ளார்.

அதில் ராஜன் பேசுகையில் ‘சந்தானம் நடிப்பில் ஓடி ஓடி உழைக்கனும் படம் தொடங்கிய தயாரிப்பாளர் தற்போது கடும் நஷ்டத்தில் இருக்கின்றார்.

அதோடு அவர் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கின்றார், சந்தானம் பெரிய மனது செய்து இந்த படத்திற்கு சம்பளம் வாங்காமல் தற்போது நடித்துக்கொடுக்க வேண்டும்.

ஆனால், படம் முடிந்த பிறகு நானே அவருக்கு சம்பளம் வாங்கி தருவேன், அவர் இந்த உதவியை செய்ய வேண்டும்’ என கோடிக்கை வைத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!