நடிகர் சங்க விவகாரம்! விஷால் எடுத்த அதிரடி முடிவு – ஆட்டம் ஆரம்பம்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் மிகுந்த கவனத்தை ஈர்த்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும். பாக்யராஜ் தலைமையில் சங்கரதாஸ் அணியும் மோதியது.

வாக்காளர் பட்டியல் முறையாக தயாரிக்கப்படவில்லை, தபால் ஓட்டுக்களை அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு தேர்தலை நிறுத்தி வைக்கும் நிலைக்கு போனது.

ஆனால் விஷால் தொடர்ந்த வழக்கால் தேர்தல் நடத்தப்பட்டும், ஓட்டு எண்ணப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நிலுவையிலிருந்த இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தது.

இதில் நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்ததோடு, மறு தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை சங்கரதாஸ் அணியினர் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது விஷால் அணி இந்த தீர்ப்பை எதிர்த்து வரும் திங்கள் கிழமை மேல் முறையீடு செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!