கட்டாயப்படுத்தினா, அது தோல்வியிலதான் முடியும் – ராணா

பாகுபலி, ஆரம்பம் படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் ராணா, கட்டாயப்படுத்தினா, அது தோல்வியிலதான் முடியும் என்று கூறியிருக்கிறார்.

தமிழில், அஜித்தின் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்திருக்கும் ராணா, பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம், இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். இந்தி படங்களிலும் நடித்துவரும் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான, எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நிஜ வாழ்க்கை ரொம்ப போரடித்ததால் நடிப்பை தொழிலாக தேர்ந்தெடுத்தேன். நிஜத்துல செய்ய முடியாததை, சினிமாவுல செய்ய முடியும்ங்கற நம்பிக்கை. சிக்கலான கேரக்டர்கள்ல நடிக்கறது எனக்குப் பிடிக்கும். காதலிக்க நேரம் இல்லை. காதல்ங்கறது அதுவாக தேடி கண்டுபிடிக்கணும்னு நினைக்கிறேன்.

நானா எதுவும் பிக்ஸ் பண்ணிக்கலை. அதை அதன் போக்குல விட்டுடறேன். நீங்க ஏதாவது நடக்கணும்னு கட்டாயப்படுத்தினா, அது எப்பவும் தோல்வியிலதான் முடியும். இது என் முந்தைய காதல் அனுபவத்துல கத்துக்கிட்டது’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!