சிபிஐ அறிக்கை தாக்கல்…. நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில் திருப்பம்

நடிகர் கலாபவன் மணியின் மர்ம மரணம் தொடர்பாக விசாரித்து வந்த சிபிஐ, 35 பக்கங்கள் கொண்ட அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்தவர் நடிகர் கலாபவன் மணி. இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் தேதி மர்மமான முறையில் அவரது பண்ணை வீட்டில் உயிரிழந்து கிடந்தார். அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் கூறிய நிலையில், இது குறித்து சிபிஐ விசாரித்து வந்தது.

இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில், எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் 35 பக்கங்கள் கொண்ட அறிக்கையை, சி.பி.ஐ. தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், கலாபவன் மணியின் மரணம் கொலையல்ல எனவும், அளவுக்கு அதிகமான மதுபானம் அருந்தியதால் ஏற்பட்ட கல்லீரல் நோயால் தான் அவர் மரணத்தை தழுவியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!