பிக்பாஸ் குழுவினரால் சரவணனுக்கு ஏற்பட்ட மற்றொரு சோகம்- இப்படியா நடந்தது?

பிக்பாஸ் 3வது சீசனில் நிறைய சர்ச்சையான விஷயங்கள் நடந்தன.

அதில் முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் சரவணன் அவர்கள் என்ன காரணம் என்று தெரியாமல் வெளியேறியது, மற்றொன்று மதுமிதாவின் தற்கொலை முயற்சி.

அண்மையில் சரவணன் பிக்பாஸ் பிறகு தனது வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அதில் பிக்பாஸில் பேசப்பட்ட பணம் வந்ததா என்று கேட்டுள்ளனர்.

சரவணன் அதற்கு, நிகழ்ச்சியில் இருந்து வெளியே அனுப்பியது வருத்தம் இருக்கு. ஆனால் தொலைக்காட்சி போட்ட அக்ரீமென்டை மீறாமல் இருந்தேன். நூறு நாள் பொறுத்து சம்பளம் கேட்டேன், ஆனாலும் சில நாட்கள் அலைய வேண்டியது இருந்தது.

ஒரு வழியா வாங்கிட்டேன், ஆனால் இதற்கு முந்தைய சீசன்களில் எல்லாம் முரண்டு பிடித்தவர்களுக்கு உடனே சம்பளம் கொடுத்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். இந்த இடத்தில் மிகவும் வருத்தம் எனக்கு.

முரண்டு பிடித்தா உடனே பணம், அமைதியா இருந்தா லேட்டா கொடுக்கிறாங்க என சோகத்துடன் பேசியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!