கௌதம் மேனன் சமீபத்திய பேட்டியில் தாக்கி பேசியது இந்த முன்னணி நடிகரை தானா?

தமிழ் சினிமா இன்றும் ஹீரோக்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அவர்கள் சொல்வது தான் சட்டம் என்று இருந்து வருகின்றது.

அப்படியிருக்க ஒரு சில இயக்குனர்களே தங்கள் ஸ்டைலை விட்டுக்கொடுக்காமல் இன்றும் படம் இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கௌதம் மேனன், ஹீரோக்களுக்கு படம் பண்ணுவது என்றால், அவர்களின் அரசியல் வளர்ச்சிக்கு வசனம் எழுதும் நிலைமை உள்ளது என்பது போல் ஒரு கருத்தை தெரிவித்தார்.

இது விஜய் அல்லது ரஜினியா? என்று சமூக வலைத்தளத்தில் பெரிய விவாதம் உண்டாகியுள்ளது, ஏனெனில் கௌதம் சில வருடங்களுக்கு முன்பு ரஜினி மற்றும் விஜய்யை சந்தித்து கதை சொன்னது குறிப்பிடத்தக்கது. இதனால் வழக்கம் போல் இவரை தான் சொன்னார், அவரை தான் சொன்னார் என சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!