ஆரவ் என்ன இப்படி சொல்லிட்டாரு!: அவ்வளவு தானா ஓவியா?

ஆரவ் தெரிவித்துள்ள விஷயம் ஓவியா ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பிக் பாஸ் காதல்
பிக் பாஸ் வீடு என்றால் ஒரு காதல் உருவாக வேண்டும், அல்லது உருவாக்கப்பட வேண்டும் என்பது முதலில் ஆரவ், ஓவியாவுடன் தான் துவங்கியது. நிகழ்ச்சி முடிந்த பிறகும் இருவரும் ஜோடியாக வெளிநாட்டிற்கு செல்வது, ஊர் சுற்றுவது என்று இருந்தார்கள். இதை பார்த்த ரசிகர்கள் ஓவியாவும், ஆரவும் நிச்சயம் திருமணம் செய்து கொள்வார்கள் என்று நம்பினார்கள், நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் ஆரவ் குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

ஆரவ்
இந்த ஆண்டு ஓவியாவின் பிறந்தநாளுக்கு சர்பிரைஸ் பார்ட்டி கொடுத்து அசத்தினார் ஆரவ். என்ன ஓவியா, ஆரவை காதலிக்கிறீர்களா என்று கேட்டதற்கு நாங்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக உள்ளோம் என்றார். ஆனால் ஆரவ், ஓவியா இடையேயான காதல் தற்போது முறிந்துவிட்டதாம். இது குறித்து ஆரவ் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறியதாவது, நான் யாரையும் காதலிக்கவில்லை. ஓவியா அவர் சொந்த ஊரில், வேலையில் பிசியாக உள்ளார். நாங்கள் அவ்வப்போது டச்சில் உள்ளோம். நான் பிற பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸுடனும் டச்சில் உள்ளேன் என்றார்.

ரசிகர்கள் அதிர்ச்சி
ஆரவ், ஓவியா காதல் பிக் பாஸ் 3 வரைக்கும் நீடித்தது. இந்நிலையில் அவர்களின் காதல் முறிந்ததில் அவர்களை விட ரசிகர்கள் தான் கவலை அடைந்துள்ளனர். கல்யாணம் எல்லாம் நடந்து, குட்டி ஓவியா வரும் என்று கனவு கண்டோமே, கடைசியில் இப்படி ஆகிவிட்டதே என்று ஓவியா ரசிகர்கள் புலம்புகிறார்கள். எத்தனை சீசன் வந்தாலும் பிக் பாஸ் காதல்னா அது ஆரவ், ஓவியா காதல்னு பெருமையாக சொன்னது எல்லாம் வீணாப் போச்சே என்கிறார்கள் அவர்கள்.

மார்க்கெட் ராஜா
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரவ் நடித்த மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படம் வெளியாகி வந்த இடம் தெரியாமல் போனது. வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தை பார்த்தவர்களுக்கு இந்த மார்க்கெட் ராஜாவை பிடிக்கவில்லை. அந்த படத்தில் ஓவியா ஆரவுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு ஆடியதுடன், கவுரவத் தோற்றத்தில் வந்தார். படம் வெளியான வேகத்தில் அவர்களின் காதல் இப்படி முறிந்துவிட்டதே. ஆரவ் அடுத்ததாக தனது ராஜ பீமா பட ரிலீஸை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறா

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!