புஷ்பவனம் குப்புசாமியின் மகள் மாயம்- போலீசில் புகார்

பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மகள் பல்லவியுடன் புஷ்பவனம் குப்புசாமி-அனிதா தம்பதி
பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது மனைவி அனிதா குப்புசாமி ஆகியோர் திரைப்படங்களில் ஏராளமான நாட்டுப்புற பாடல்களை பாடி பிரபலமாகினர். இத்தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளான பல்லவி, மருத்துவ மேற்படிப்பு படித்து வருகிறார். இவர் மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரது உறவினர் அளித்த புகாரில், “புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி, நேற்றிரவு தங்கையுடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றுவிட்டார். எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. செல்போனையும் தொடர்புகொள்ள முடியவில்லை. போலீசார் கண்டுபிடித்து தர வேண்டும்” என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!