சர்ச்சை, சர்ச்சை, சர்ச்சையோ சர்ச்சை: இதுக்கெல்லாம் அசரும் ஆளா நயன்தாரா!

2019ம் ஆண்டில் நயன்தாரா சர்ச்சையை ஏற்படுத்தினார், மேலும் அவரை பற்றி பேசப்பட்ட விஷயத்தாலும் சர்ச்சை ஏற்பட்டது.

சர்ச்சை நடிகை
நயன்தாராவையும், சர்ச்சைகளையும் பிரிக்கவே முடியாது என்று கோலிவுட்டில் சொல்வார்கள். அந்த அளவுக்கு அவர் சர்ச்சைகளில் சிக்குவார். அவர் இடத்தில் வேறு எந்த நடிகை இருந்தாலும் இந்த அளவுக்கு தைரியமாக இருக்க முடியாது. ஒவ்வொரு ஆண்டிலும் இந்த ஆண்டு ஹிட்டான, தோல்வி அடைந்த படங்கள் எது என்று பார்ப்பது போன்று நயன்தாராவின் சர்ச்சைகளை பட்டியலிடுவதும் வழக்கமாகி விட்டது. 2019ம் ஆண்டு ஒன்றும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

ராதாரவி
நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ராதாரவி பேசியது பலரையும் கோபம் அடையச் செய்தது. நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதாவாகவும் நடிக்கிறார். தற்போது எல்லாம் யார் வேண்டுமானாலும் சாமியாக நடிக்கலாம். ஏன் என்றால் பார்த்த உடனேயே கும்பிடறவரையும் போடலாம். பார்த்த உடனேயே கூப்பிடவரையும் போடலாம் என்றார் ராதாரவி. பட வாய்ப்பு பெற படுக்கைக்கு செல்வது குறித்து ராதாரவி இப்படி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விஷயத்தில் நயன்தாரா தன்மையாக பதில் அளித்தார்.

பிகில்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு நயன்தாரா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அக்கா, உங்கள் கொள்கையை கொஞ்சம் தளர்த்தி இசை வெளியீட்டு விழாவுக்கு வாங்கக்கா என்று அட்லி நயன்தாராவை அழைத்தாராம். விஜய்க்காக இல்லாவிட்டாலும் தம்பிக்காக வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் இசை வெளியீட்டு விழாவுக்கு நயன்தாரா வரவில்லை.

தர்பார்
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தர்பார் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பிற்கு நயன்தாரா வரவில்லை. சம்பள பாக்கி இருப்பதாகக் கூறி அவர் படப்பிடிப்புக்கு வராதது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. என்ன தான் சம்பள பாக்கியாக இருந்தாலும் பேசித் தீர்த்திருக்கலாமே, இப்படி பெரிய நடிகரின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதா சேட்டை செய்வது என்று நயன்தாராவை கோடம்பாக்கத்தில் விமர்சித்தார்கள்.

தப்பு பண்ணிட்டேன்
தர்பார் படத்தில் நடித்து முடித்த கையோடு என் கெரியரில் நான் செய்த மிகப் பெரிய தவறே ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிய கஜினி படத்தில் நடித்தது தான் என்று தெரிவித்தார் நயன்தாரா. ஏற்கனவே பேசிய விஷயத்தை இவர் ஏன் மீண்டும் பேசுகிறார் என்று விமர்சனம் எழுந்தது. முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க பிடிக்கவில்லை என்றால் தர்பாரில் எதற்காக நடித்தாராம் என்ற கேள்வி எழுந்தது. இந்த விவகாரம் குறித்து முருகதாஸ் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!