ஏப்பா சிம்பு ரசிகாஸ், நீங்க ஆசைப்பட்டது ரொம்ப சீக்கிரமே நடக்கப் போகுது!

சிம்பு ரசிகர்கள் எதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்களோ அது விரைவில் நடக்க உள்ளது.

சிம்பு மாநாடு
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மாநாடு படத்தில் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் பிறகு சிம்பு படப்பிடிப்புக்கு வராமல் இழுத்தடிப்பதாகக் கூறி அவரை மாநாட்டில் இருந்து நீக்கினார்கள். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி சிம்புவை வைத்தே மாநாடு படத்தை எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியும். பேச்சுவார்த்தை நடந்ததே தவிர படப்பிடிப்பு பற்றி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மாநாடு படப்பிடிப்பு
மாநாடு படம் தொடர்பாக சிம்பு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தரப்புக்கு இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாம். பிரச்சனைகள் தீர்ந்துள்ளதால் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு படப்பிடிப்பை துவங்குவது என்று முடிவு செய்துள்ளார்களாம். மாநாடு பட வேலைகள் எப்பொழுது துவங்கும் என்று சிம்பு ரசிகர்கள் தான் தவமாய் தவமிருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கும்.

வெங்கட் பிரபுவுக்கு வேண்டுகோள்
மாநாடு படத்தில் இருந்து சிம்புவை நீக்குவதாக முன்பு சுரேஷ் காமாட்சி அறிவித்ததை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே அவர்கள், சுரேஷ் காமாட்சியை நீக்கிவிட்டு வேறு ஒரு தயாரிப்பாளரை வைத்து படத்தை எடுக்குமாறு வெங்கட் பிரபுவிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவரும் படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில் தான் மனஸ்தாபங்கள் தீர்க்கப்பட்டு வெங்கட் பிரபு, சிம்பு ஆகியோர் ஒன்று சேர்ந்துள்ளனர்.

அம்மா உறுதி
சிம்பு சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருவார், ஒப்புக் கொண்ட நேரத்திற்குள் நடித்துக் கொடுப்பார் என்று அவரின் அம்மா உஷா தயாரிப்பு தரப்புக்கு வாக்குறுதி அளித்துள்ளார். படப்பிடிப்பை துவங்கும் முன்பே பல பிரச்சனைகளை சந்தித்துள்ளதால் பூஜை போடும் நாளை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். சிம்பு 80 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். பிரேக்கே இல்லாமல் தொடர்ந்து 80 நாட்கள் நடிக்கப் போகிறாராம் அவர். சிம்பு பழையபடி வம்பு பண்ண ஆரம்பித்துவிட்டார் என்ற புகார் எழுந்த நிலையில் அவர் 80 நாட்களில் தனது காட்சிகளை நடித்துக் கொடுக்கப் போகிறாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!