‘தண்ணி கொடம்’ டியூன் காப்பி: இதுக்குத் தான் எஸ்.பி.பி.யை பாட வச்சீங்களா அனிருத்?

தண்ணி கொடம் எடுத்து பாடல் டியூனை காப்பியடித்ததும் இல்லாமல் அதை எஸ்.பி.பி.யை பாட வைத்தது தான் ஹைலட் என்று நெட்டிசன்கள் அனிருத்தை கிண்டல் செய்துள்ளனர்.

சாமி பாட்டு காப்பி
தர்பார் படத்தில் வரும் சும்மா கிழி பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது. அனிருத் இசையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியதை கேட்டவர்கள் ஆஹா, நல்லா இருக்கே என்றார்கள். ஆனால் இசை பிரியர்களோ, இதை எங்கேயோ கேட்டது போன்று இருக்கே என்று யோசிக்கத் துவங்கினார்கள். அனிருத்து ஐயப்பன் பாட்டு டியூனை இப்படி காப்பியடித்திருக்கிறீர்களே, சாமி கண்ணைக் குத்தாதா என்று கேட்டு சமூக வலைதளங்களில் சிரிக்கிறார்கள். பெரிய ஆளுய்யா நீங்க, இதில் சும்மா கிழிக்க ரெடியா கண்ணுங்களான்னு கொஞ்ச நஞ்ச பில்ட்அப்பா கொடுத்தீர் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

தண்ணி கொடம் பாட்டு
இன்னும் சிலரோ சும்மா கிழி பாடலை கேட்டவுடன் அட தண்ணி கொடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது மனசு தவிக்குது பாடலின் டியூனை தான் அனிருத் சுட்டுட்டார் என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளனர். மேலும் தண்ணி கொடம் எடுத்து பாடலை பாடிய எஸ்.பி. பாலசுப்ரமணியத்தையே சும்மா கிழி பாடலையும் பாட வைத்த அனிருத் பெரிய ஆளு தான் என்று கூறி கலாய்த்து மீம்ஸ் போட்டுள்ளனர்.

எஸ்.பி.பி. பாவம்
சும்மா கிழி பாடலை ரஜினி ரசிகர்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மற்றவர்களோ, அனிருத் தயவு செய்து இனி அவருடன் மட்டும் சேராதீர்கள். சேர்க்கை சரி இல்லாததால் தான் இப்படி காப்பியடித்து அதற்கு பெரிய பில்ட்அப் கொடுக்கத் தோன்றுகிறது. என்ன தான் காப்பின்னாலும் ஒரு நியாயம் வேண்டாமா அனிருத்து என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

விவேக் ரஜினிக்காக அவரின் வருங்கால அரசியல் வாழ்க்கையை எல்லாம் மனதில் வைத்து யோசித்து யோசித்து மாஸாக பாட்டு எழுதியுள்ளார் என்று ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஒரு கூட்டமோ இப்படியும் வீடியோ போட்டு ஒன்னுமே இல்ல கண்ணா என்று கிண்டல் செய்து கொண்டிருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!