நைசா கரெக்ட் பண்ண பார்த்த ஹீரோ: ரகுல் ப்ரீத் சிங் என்ன செய்தார் தெரியுமா?

நடிகர் ஒருவர் தன் மீது ஆர்வமாக இருந்ததாக ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

ரகுல் ப்ரீத் கெரியர்
தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். இருப்பினும் அவரால் மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற முடியவில்லை. அண்மை காலமாக ரகுல் தனது படங்களை விட காதல் விவகாரத்தால் தான் அதிகம் பேசப்படுகிறார். அவருக்கும் தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் காதல் என்று தொடர்ந்து கிசுகிசுக்கப்படுகிறது. காதல் எல்லாம் இல்லை நான் என் வேலையை மட்டுமே காதலிக்கிறேன் என்று ரகுல் ப்ரீத் தெரிவித்தும் யாரும் நம்பவில்லை. இந்நிலையில் அவர் தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

ஹீரோவுக்கு காதல்
என்னுடன் சேர்ந்து நடித்த நடிகர் ஒருவருக்கு என் மீது கண் இருந்தது. ஆனால் அவர் என்னிடம் மோசமாக நடந்து கொள்ளவில்லை. எனக்கு அவர் மீது ஈடுபாடு இல்லை. முதலில் அந்த நடிகரின எண்ணம் எனக்கு தெரியவில்லை. அதன் பிறகு தோழி ஒருவரிடம் பேசியபோது அவர் தான் இங்கு என்ன நடக்கிறது என்று உனக்கு புரிகிறதா என்று கேட்டார். அதன் பிறகே அந்த நடிகரின் எண்ணம் புரிந்து அவர் எப்பொழுது என்னை வெளியே அழைத்தாலும் நான் பிசியாக இருப்பதாக கூறி வந்தேன் என்று ரகுல் ப்ரீத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஹீரோக்கள் மீது ஈர்ப்பு இல்லை
என் சக நடிகர்கள் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டதே இல்லை. அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, ராம் சரண், அஜய் தேவ்கன் என்று என் பட ஹீரோக்கள் அனைவருமே திருமணமானவர்கள். சித்தார்த் மல்ஹோத்ராவும், நானும் நண்பர்கள் ஆனோம். நாங்கள் அய்யாரி படத்தில் சேர்ந்து நடித்தபோது சித்தார்த் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். தற்போது அவர் பெயர் பலருடன் சேர்ந்து அடிபடுகிறது. அதனால் அவரை பார்க்கும் போது என்னய்யா, என்ன நடக்குது என்று கிண்டல் செய்வேன் என்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.

ரகசியத்தை உடைத்த ரகுல்
தனது காதல் வாழ்க்கை பற்றி யாரிடமும் பேசாதவர் சித்தார்த் மல்ஹோத்ரா. அப்படி இருக்கும்போது அவரின் ரகசியத்தை போட்டுடைத்துவிட்டார் ரகுல். மேலும் ரகுல் மீது ஆர்வமாக இருந்த அந்த ஹீரோ யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ரகுல் ப்ரீத் சிங்கிற்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசை உள்ளது. தன் வருங்கால கணவர் 6 அடி உயரம் இருக்க வேண்டுமாம். மேலும் அவர் ஜாலியானவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!