என்னா வேகம், என்னா வேகம்: 68 வயசுல இம்புட்டு ஸ்பீடா இருக்காரே ரஜினி

தர்பார் பட அப்டேட் எதுவும் வராதா என்று எதிர்பார்த்த ரஜினி ரசிகர்களுக்கு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் ட்வீட் மகிழ்ச்சி அளித்துள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள தர்பார் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் தர்பார் படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. டப்பிங் வேலை துவங்கியதை முருகதாஸ் ட்விட்டரில் தெரிவித்தார்.

ரஜினி டப்பிங் பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின. ரஜினி நான்கு நாட்களில் தனக்குடப்பிங் பேசி முடித்துள்ளார்.

இது குறித்து முருகதாஸ் புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது,

என் வாழ்வின் சிறந்த டப்பிங் செஷன்களில் ஒன்று…தலைவர் தர்பார் டப்பிங் முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

டப்பிங் ஸ்டுடியோவில் முருகதாஸ் மற்றும் ரஜினி அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களோ, தலைவர் எவ்வளவு எளிமையானவர் என்பது இதில் இருந்தே தெரிகிறது என்று தெரிவித்துள்ளனர்.

சம்பள பாக்கியால் கடைசி நாள் படப்பிடிப்பிற்கு வராத நயன்தாரா டப்பிங் பேச வருவாரா இல்லை அவருக்கு பதில் வேறு யாரும் பேசுவார்களா என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். நயன்தாரா தனது பிறந்தநாளை கொண்டாட காதலர் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!