என்னடா இது விஜய் சேதுபதிக்கே ரூ.2 கோடி பாக்கியா?

சங்கத்தமிழன் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் சேதுபதிக்கு ரூ.2 கோடி சம்பளம் பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வரும் 15 ஆம் தேதி வெளியாக உள்ள படம் சங்கத் தமிழன். முதல் முறையாக விஜய் சேதுபதி இப்படத்தில் இரு கதாபாத்திரங்களில் நடித்து முடித்துள்ளார். விவசாயம், ஆக்‌ஷன் காட்சிகளை மையப்படுத்திய இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து நாசர், அனன்யா, சூரி, மைம் கோபி, கயல் தேவராஜ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாக இருந்த நிலையில், திரையரங்குகள் கிடைக்காததால், இப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, இப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் விஜய் சேதுபதி கலந்து கொள்ள மறுப்பு தெரிவிக்கிறாராம். அவருக்கு உதவியாகவே ஹீரோயின்களும் புரோமோஷன் பணிகளில் கலந்து கொள்ள மறுக்கின்றனராம். ஆனால், இதற்கான காரணத்தை விஜய் சேதுபதி இதுவரை தெரிவிக்காத நிலையில், இது தொடர்பாக கோலிவுட் வட்டாரத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, படத்திற்கு எதிர்பார்த்ததை விட அதிக செலவு ஏற்பட்டுள்ளதாம். இதையடுத்து, அதற்குரிய செலவை விஜய் சேதுபதி தலையில் கட்டியதோடு, அவருக்கு சேர வேண்டிய ரூ.2 கோடியை தர மறுத்து வருகின்றனராம்.

இதனால், தான் விஜய் சேதுபதியோ, பட புரோமோஷம் படம் பற்றி பேட்டி என்று எதிலேயும் ஆர்வம் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் எப்படி இருந்தாலும் படம் அறிவித்தபடியே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு போட்டியாக விஷால், தமன்னா நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஆக்‌ஷன் படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!