துருவ நட்சத்திரம் சரி, எனக்கு ஒரு வழியை சொல்லுங்க: கவுதம் மேனனிடம் கேட்ட கார்த்திக் நரேன்

துருவ நட்சத்திரம் குறித்து ட்வீட் போட்ட கவுதம் மேனனிடம் தனக்கு ஒரு வழி சொல்லுமாறு கேட்டுள்ளார் கார்த்திக் நரேன்.

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படம் எப்பொழுது ரிலீஸாகும், இல்லை ரிலீஸ் ஆகாமலேயே போய்விடுமா என்று எல்லாம் 3 ஆண்டுகளாக பேசப்பட்டது.

இந்நிலையில் துருவ நட்சத்திரம் படம் விரைவில் ரிலீஸாகும் என்று கவுதம் மேனன் ட்விட்டரில் அறிவித்தார். இந்த படம் தனது இதயத்திற்கு நெருக்கமான ஒன்று என்றும், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

கவுதம் மேனனின் ட்வீட்டை பார்த்த இயக்குநர் கார்த்திக் நரேன் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நரகாசூரன் படம் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.

நரகாசூரன் படம் எப்பொழுது ரிலீஸாகும் என்று விளக்கம் அளித்தால் உதவியாக இருக்கும் சார். இந்த படம் என் இதயத்திற்கு மிக, மிக நெருக்கமான ஒன்று என்று கவுதம் பாணியிலேயே அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார் கார்த்திக் நரேன்.

அரவிந்த் சாமி, ஸ்ரேயா உள்ளிட்டோரை வைத்து கார்த்திக் நரேன் எடுத்த நரகாசூரன் படத்தை கவுதம் மேனன் தனது ஒன்றாக என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்தார்.

படத் தயாரிப்பு, இயக்கம் என்று ஏகப்பட்ட பிரச்சனையில் சிக்கியுள்ளார் கவுதம். ஒரு படத்திற்கு வாங்கிய பணத்தை மற்றொரு படத்திற்கு பயன்படுத்தி இரண்டு படங்களும் ரிலீஸாக முடியாமல் போகும் இடியாப்ப சிக்கலில் தான் கவுதம் உள்ளார்.

துருவங்கள் பதினாறு படத்திற்கு பிறகு கார்த்திக் இயக்கிய நரகாசூரன் எப்பொழுது ரிலீஸாகும் என்று தெரியவில்லை. காத்திருந்து காத்திருந்து பார்த்த கார்த்திக் அருண் விஜய்யை வைத்து மாஃபியா படத்தை எடுக்கச் சென்றுவிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!