எங்கூட நேரம் ஒதுக்காம இன்டர்வியூ கொடுத்துட்டுருக்க: அட்லியிடம் கேள்வி கேட்ட ப்ரியா!

பிகில் படம் முடிஞ்சும் என் கூட நேரம் ஒதுக்காம இன்டர்வியூ கொடுத்துக்கிட்டு இருக்குற என்று அட்லியிடம் அவரது மனைவி ப்ரியா ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லி இரவும், பகலும் கஷ்ப்பட்டு கொடுத்த படம்தான் பிகில். இப்படத்தில், விஜய், நயன் தாரா ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ளனர். இந்த நிலையில் பிகில் படம் குறித்தும், தனது அனுபவம் குறித்து நேற்று ரசிகர்களுடன் ட்விட்டரில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். அப்போது ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு காரசாரமாக பதிலளித்துள்ளார்.

இதில், அட்லியின் மனைவியும், அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ப்ரியா கூறியிருப்பதாவது: ஹாய் பாபா நீ படம் முடிச்சிட்டு என் கூட நேரம் கழிக்காமல் அங்க என்ன இன்டர்வியூ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் அட்லி கூறியிருப்பதாவது: இதோ வந்து கொண்டிருக்கிறேன். இன்னும் 5 நிமிடத்தில் வந்துவிடுவேன்….தோ தோ தோ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள், அண்ணா வ தீபாவளி வர டிஸ்டர்ப் பண்ணாதீங்க. பிகில் கொண்டாட்டம் முடிந்த பிறகு அவரை பத்திரமாக உங்களிடம் கொடுத்துவிடுவோம் என்று கூறியுள்ளனர். மேலும், எக்கா சும்மா இருக்கா, அவரே இப்போதான் அப்டேட் கொடுக்க ஆரம்பிச்சிருக்காரு… என்றெல்லாம் கிண்டலடித்து ட்வீட் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்த விஜய்யின் பிகில் படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில், விஜய் கால்பந்து கோச்சராகவும், மீன் வியாபாரியாகவும், விளையாட்டு வீரராகவும் 3 விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதில், மீன் வியாபாரியாக வரும் ராயப்பன் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர்.

பிகில், தங்களது கதை என்று கேபி செல்வா மற்றும் அம்ஜத் மீரான் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை வரும் நவம்பர் 5 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக பிகில் படம் வெற்றிகரமாக இன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!