விஜய் விபூதி பூசினால் என்ன, சிலுவை அணிந்தால் உங்களுக்கு என்னய்யா? எஸ்.வி.சேகர்!

விஜய்யின் பிகில் படம் வெளியாக உள்ள நிலையில், விஜய் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் வரும் 25 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில், விஜய், ராயப்பன், மைக்கேன் மற்றும் பிகில் என்று கிறிஸ்துவ மதம் சார்ந்த பெயர்களின் கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார். இது குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

விஜய், இந்து ரசிகர்களை மதம் மாற்றம் செய்வதற்கு குழுவிலிருந்து பெரிய தொகை பெற்றிருப்பதாக சிலர் விமர்சனம் செய்துள்ளனர். மேலும், கடைகளில், பிகில் உடை விற்பகப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இதை பெரிதுபடுத்துவது சரியல்ல என்பது என் கருத்து. விஜய் ஒரு நல்ல நடிகர். அந்த நடிகரின் ரசிகர்களுக்காக விற்கப்படும் பொருட்கள். இதில் காவி வேட்டி, ருத்திராக்‌ஷம் கூட இருக்கின்றதே. இதை விற்கும் கடைக்காரர்கள் அனைவரும் மாற்று மதத்தினரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், விஜய் விபூதி பூசி நடிக்கும் போது பிடிக்கும். சிலுவை அணியும் போது பிடிக்காதது சரியல்ல. அவர் எங்கேயாவது, பொது வெளியில், தன் மதத்தை மட்டும் உயர்வாக பேசி மற்ற மதத்தை தாழ்வாக பேசி பார்த்துள்ளீரா. வேற்றுமையில் ஒற்றுமை என்று அவர் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே விஜய்யின் பிகில் படத்திற்கு பல தரப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், தற்போது ட்விட்டரில் அவர் ஒரு கிறிஸ்துவர், இந்து ரசிகர்களை மதம் மாறுவதற்கு பணம் பெற்றுக்கொண்டுள்ளார் என்று மதம் சார்ந்த சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!