விக்னேஷ் சிவன் ஏன் அப்படி செய்தார்?: சிவகார்த்திகேயன் மீது இன்னும் கோபமா?

இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களை பார்த்தவர்கள் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையேயான பிரச்சனை இன்னும் தீரவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

சிவகார்த்திகேயனை வைத்து விக்னேஷ் சிவன் படம் இயக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கதை பிடிக்காததால் அதை மாற்றுமாறு சிவகார்த்திகேயன் விக்னேஷ் சிவனிடம் கூறியதாகவும், அதனால் படம் கைவிடப்பட்டதாகவும் பேச்சு கிளம்பியது.

இந்நிலையில் தான் விக்னேஷ் சிவன் படத்தில் நடிப்பதை உறுதி செய்தார் சிவகார்த்திகேயன். கதை பிரச்சனையால் விக்கி, சிவகார்த்திகேயன் இடையே சரியான பேச்சுவார்த்தை இல்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், இயக்குநர் நெல்சன் திலீப் குமார் மற்றும் டான்ஸர் சதீஷ் ஆகியோர் சேர்ந்து ஆம்ஸ்டர்டாமுக்கு பயணம் செய்துள்ளனர்.

பயணத்தின்போது எடுத்த புகைப்படங்களை நெல்சன் மற்றும் சதீஷ் ஆகியோர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.

விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் இல்லை. இதை பார்த்த ரசிகர்கள் ஒன்றாக பயணம் செய்கிறீர்கள், ஆனால் சிவாவுடன் எடுத்த புகைப்படத்தை மட்டும் ஏன் வெளியிடவில்லை அன்பான இயக்குநரே என்று விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

புகைப்படம் அல்ல விக்கியின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் சிவகார்த்திகேயனின் பெயரும் இல்லாதது ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. ஒன்றாக சேர்ந்து பயணம் செய்துள்ளார்கள் என்றால் பிரச்சனை எதுவும் இல்லை என்று தானே அர்த்தம்.

சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் இடையேயான பிரச்சனை குறித்து அவர்கள் விளக்கம் அளிக்கும் வரை இந்த பேச்சுகள் ஓயவே ஓயாது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான இது நம்ம வீட்டுப் பிள்ளை வெற்றி பெற்றுள்ளது. விக்னேஷ் சிவன் தற்போது தனது காதலி நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!