அடித்தது செம லக்: ஷாருக் கானை இயக்கும் அட்லீ?

அட்லீ அடுத்ததாக ஷாருக் கானை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோலிவுட்டில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. அந்த படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றதால், அட்லீ படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தியது.

அது மட்டுமின்றி ராஜா ராணி படம் ரூ.50 கோடி வசூல் செய்தது. அதைத் தொடர்ந்து விஜயை வைத்து தெறி, மெர்சல் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார். தொடர்ந்து இவர் இயக்கம் படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால், தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத இயக்குநர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் அட்லீ.

தற்போது மூன்றாவது முறையாக விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கி முடித்துள்ளார். நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தை ஏ.ஜி. எஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. பிகில் படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் அடுத்ததாக அட்லீ யாரை வைத்து படம் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. அந்த வகையில் அடுத்ததாக அட்லீ, ஷாருக் கானை வைத்து படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தை ஷாருக் கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் வருகிற டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாம். தமிழ், இந்தி மொழிகளில் இப்படம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்ப்பாகிறது.

முன்னதாக ஷாரு கான் மற்றும் அட்லீ ஐபில் விளையாட்டு நடைபெற்றுக் கொண்டு இருந்த சமயத்தில் அருகில் அமர்ந்து கொண்டு இருந்தனர். உடனே அவர்கள் இருவரும் இணைந்து படம் பண்ணப் போவதாக தகவல் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!