‘நான் சாகற வரைக்கும் நடிப்பேன்!’ பாலிவுட் நடிகையின் பிடிவாதம்!

பாலிவுட்டில் ஏறக்குறைய இருபது ஆண்டுகள் நடித்து முடித்த நடிகை கரீனா கபூர் கான், தான் ஒரு பிறவி நடிகை என்றும், சாகும்வரையில் நடிப்பேன்’ என்று அண்மையில் ஒரு பேட்டியில் கூறினார்.

‘நடிப்புதான் என் உயிர் மூச்சு, என் வாழ்க்கையின் இறுதி மூச்சு வரை அதையே செய்வேன்’ என்றும் நெகிழ்ச்சியாகக் கூறினார் இந்த நடிப்பு ராட்சசி. கரீனா 2000-ஆம் ஆண்டில் அபிஷேக் பச்சனுடன் இணைந்து ‘Refugee’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் கரீனா. அதன்பின், ‘ஜப் வீ மெட்’, ‘உடுடா பஞ்சாப்’, ‘சமேலி’ ‘அசோகா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

சனிக்கிழமை நடைபெற்ற எல்லே பியூட்டி விருதுகள் 2019 நிகழ்ச்சியில் கரீனா ஊடகங்களுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியது, ’20 ஆண்டு காலம் சில அற்புதமான மனிதர்களுடனான மகத்தான பயணம் இது. நான் நடிக்கத்தான் பிறந்தேன். ஏனென்றால் என் ஆர்வம் முழுவதும் இதில்தான் உள்ளது, என் வாழ்க்கையின் இறுதிநாள் வரை நிச்சயம் நடிப்பேன்.’ என்றார் கரீனா.

தற்போது, கரீனா ஆமிர்கானுடன் மூன்றாவது முறையாக ‘லால் சிங் சத்தா’ என்ற படத்தில் இணைகிறார். இது குறித்து கரீனா கூறுகையில், ‘அமீர் கானுடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் ஒரு சூப்பர் ஸ்டார், தன்னிகறற்ற சினிமா மேதை’ என்று பாராட்டினார்.

‘படம் பற்றி என்னால் இப்போது எதுவும் பேச முடியாது, காரணம் இது மிகவும் வித்யாசமான கதை, தகுந்த நேரம் வரும்போது நாங்கள் நிச்சயம் படம் பற்றி பேசுவோம். அமீருடன் ஒரே திரையில் காட்சியளிப்பது எனக்குக் கிடைத்த பெரிய கெளரவம், ஏனென்றால் நான் அன்றும் இன்றும் என்றென்றும் அமீரின் மிகப் பெரிய ரசிகை’ என்றார் கரீனா.

ரீமா கட்கி ‘தலாஷ்’ மற்றும் ராஜ்குமார் ஹிரானியின் ‘3 இடியட்ஸ்’ படங்களில் அமீர்கானுடன் நடித்துள்ளார் கரீனா. ‘நான் அவருடன் பணிபுரியும் போதெல்லாம் இது ஒரு கனவு நனவான தருணம் என்றே நினைப்பேன்’ என்று அவர் மேலும் கூறினார்.

டாம் ஹாங்க்ஸ் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற பழைய ஹாலிவுட் கிளாசிக் படமான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்தான் ‘லால் சிங் சத்தா’. அதுல் குல்கர்னியின் எழுத்தாக்கத்தில், அத்வைத் சந்தன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இப்படத்தை அமீர்கான் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து வியாகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இந்தப் படம் 2020 கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது திரையிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கரீனா தனது வானொலி அரட்டை நிகழ்ச்சியான “வாட் வுமன் வாண்ட்” நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனுக்குத் தயாராகிவிட்டார் என்று தெரிகிறது. இந்த சீசன் 2- வின் முதல் விருந்தினர்களில் ஒருவராக கரீனாவின் கணவர் சயஃப் அலிகான் வரவிருக்கிறார்.

‘பெண்கள் என்ன விரும்புகிறார்கள்’ என்பது குறித்து சயஃப் (சைஃப் அலி கான் பேசவிருக்கிறார். இந்நிகழ்ச்சியில், அவர் நவீன திருமணங்களைப் பற்றியும் தனது கருத்துக்களைப் பேசுவார். கடந்த சீசன் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது, மக்கள் தங்கள் வாழ்க்கையின் வெவ்வேறு விஷயங்களைப் பற்றி மிக வெளிப்படையாகப் பேசினர்.

நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஏனென்றால் வரவிருக்கும் விருந்தினர்கள் அனைவரும் பிரபலமானவர்கள், மிகவும் முக்கியம் வாய்ந்தவர்கள். மேலும் என் மாமியார் (ஷர்மிளா தாகூர்), இந்த சீசன் 2-வில் வரவிருக்கிறார். எனவே இது சீசன் ஒன்றை விட மிகச் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.’ என்று மனம் திறந்து பல கருத்துக்களை பகிர்ந்தார் கரீனா கபூர் கா

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!