தர்பார் ஷூட்டிங் முடிந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த்

தர்பார் படத்தின் ஷூட்டிங் பணி முடித்து ரஜினிகாந்த் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தர்பார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது ஷூட்டிங் பணிகள் முடிந்த நிலையில் ரஜினிகாந்த் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.

அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, படம் நன்றாக வந்துள்ளதாக’ தெரிவித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளதைக் காண அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

தர்பார் படத்தில் ரஜினிகாந்த்துடன் இணைந்து யோகிபாபு, ஜதின் சர்னா, பிரதீக் பாபர், நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தளபதி(1991) படத்திற்குப் பிறகு சந்தோஷ் சிவன் இதில் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

முன்னதாக இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான பேட்ட படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.மேலும் அதே போன்று தர்பார் படமும் கண்டிப்பாக வெற்றி பெரும் என்று ரசிகர்கள் நம்பிக்கையாகக் கூறி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!