பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ். கார்த்திக், செண்பா என்ற கதாபாத்திரத்தில் கணவன் மனைவியாக நடித்த இவர்கள் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தனர். மேலும் சீரியலில் மட்டுமின்றி நிஜத்திலும் காதலிக்க ஆரம்பித்தனர்.
https://www.instagram.com/p/B2mBpkkB_Cf/
அதனை தொடர்ந்து இருவரும் அவ்வப்போது ஒன்றாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வது, விளம்பர படங்களில் நடிப்பது, டப்மாஷ் வீடியோ, புகைப்படங்கள் என மிகவும் ஜாலியாக சுற்றித்திரிந்தனர். மேலும் இந்தக் காதல் ஜோடியின் திருமணம் எப்பொழுது என ரசிகர்கள் எதிர்பார்த்துவந்த நிலையில் அவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
https://www.instagram.com/p/B2j4kSsh_BQ/
மேலும் தனது பிறந்தநாள் அன்றே தனக்கும், சஞ்சய்க்கும் திருமணம் நடைபெற்றுள்ளதாக சமீபத்தில் ஆலியாவும் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பல பிரபலங்களும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும் சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
https://www.instagram.com/p/B2g_e-chcgk/?utm_source=ig_embed&utm_campaign=dlfix
இந்நிலையில் ஆலியா மானசா மற்றும் சஞ்சய்க்கு சமீபத்தில் மிகவும் கோலாகலமாக திருமண வரவேற்பு விழா நடைபெற்றுள்ளது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.