பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 முடிய இன்னும் 20 நாட்களே உள்ளன. 17 பேர் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் தற்போது இருக்கும் போட்டியாளர்கள் 7 பேர் மட்டுமே.
இதில் கடந்த சில நாட்களாக கவின், லாஸ்லியா காதல் விசயம் தான் காட்டப்பட்டு வருகிறது. லாஸ்லியாவை மகள் போலவே உண்மையாக நினைத்த சேரன் இந்த காதல் விசயத்தை இங்கு பேச வேண்டாம் என கூறியிருந்தார்.
வாக்குறுதி கொடுத்துவிட்டு பின் கவின் அதை மீறியது சேரனுக்கு பிடிக்கவில்லை. சீக்ரட் ரூமில் இருக்கும் அவர் கடிதம் மூலம் கவின் செய்த தவறையும் சுட்டிக்காட்டி கேள்வியும் கேட்டுவிட்டார்.
I noticed 😀Avarku ponnu mela paasam illa, kavin mela kadupuairukar 😂 Heights of jealousy https://t.co/DtvXQYDAqa
— Kaajal Pasupathi (@kaajalActress) September 10, 2019
இந்நிலையில் பிக்பாஸ் காஜல் சேரனுக்கு லாஸ்லியா மேல பாசம் இல்ல, கவின் மேல கடுப்புல இருக்கிறார். பொறாமையின் உச்சம் என கூறியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.