நான் கையை அறுத்தபோது அவர்கள் சிரித்தார்கள்.. முதன் முதலாக நடந்ததை கூறி கண்கலங்கிய மதுமிதா..!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த மதுமிதாவால் பல சர்ச்சைகள் உருவாகியது.

மதுமிதா எதனால் கையை அறுத்துக்கொண்டார் என்ற விஷயம் வெளியில் வராத நிலையில் சில விஷயங்களை சொல்ல நான் கடமை பட்டு இருக்கிறேன் என்று முதல் முறையாக மனம் திறக்கிறார் மதுமிதா.

வாட்ஸ் அப்பில் வைக்கின்ற ஸ்டேட்டஸ் போல் உங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்துங்கள் அதை Hello App பதிவிடப்போகிறோம் சொன்னார்கள். அதைத்தொடர்ந்து, சுதந்திர தினம் அன்று தமிழ் நாட்டில் மழை இல்லாத ஆதங்கத்தில் நான் சொன்ன ஒரு வரி கவிதை’ வர்ண பகவானும் கர்நாடகாவை சேர்த்தவரோ மறை வடிவில் கூட மழை தர மறுக்கிறார் இதில் எங்கும் அரசியல் இல்லை, ஆனால் அதை முற்றிலும் அரசியல் ஆக்கிவிட்டனர் அந்த எட்டு பேர்.

அதை தொடர்ந்து பிக்பாஸ் இடம் இருந்து அரசியல் பேசக்கூடாது என்று தகவல் வந்த உடன் மேலும் என்னை பேச ஆரம்பித்து விட்டனர் அதை பொறுக்க முடியாமல் நான் கையை அறுத்து கொண்ட போது சேரன் கஸ்தூரி தவிர மிதியுள்ளவர்கள் அதை கிண்டலாக பார்த்து சிரித்தனர் என்று மதுமிதா கவலையுடன் முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.