இனி சிம்புவுக்கு கல்யாணம் ஆகுறது இவர் கையில் தான் இருக்கு – டி.ஆர் பேட்டி.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு 36 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருந்து வருகிறார். இரண்டு முன்னணி நடிகைகளை காதலித்து அதுவும் திருமணம் வரை கை கூடாமல் பிரேக்கப்பில் முடிந்து விட்டது.

இதனால் திருமணமே வேண்டாம் என இருந்து வந்த சிம்புவை சமாதானப்படுத்தி அவரின் பெற்றோர் பெண் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசனம் செய்த டி.ஆர் சிம்புவுக்கு சாதாரண பெண் வேண்டும் என்றால் எப்போது திருமணம் முடிந்திருக்கும்.

அவருக்கு ஏற்ற பெண் வேண்டும் என்பதால் அத்தி வரதரை வேண்டி கொண்டேன். சிம்புவுக்கு பொருத்தமான பெண் அமைத்து திருமணத்தை நடத்தி வைப்பது இனி அத்தி வரதர் கையில் தான் உள்ளது என கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.