பிக் பாஸில் கமலை தரைகுறைவாக பேசினாரா சரவணன்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனின் 44-வது நாள் நேற்று ஒளிபரப்பானது.

நிகழ்ச்சியின் இறுதியில் இரு வாரங்களுக்கு முன்பு கல்லூரி பருவத்தின் போது பெண்களை இடித்ததாக கூறியதற்காக வெளியேற்றப்படுவதாக பிக் பாஸ் கூறினார்.

ஆனால் நெட்டிசன்கள் இது குறித்து அவர் மன்னிப்பும் கேட்டு விட்டார். அந்த விவகாரம் முடிந்தும் இரண்டு வாரம் ஆகி விட்டது. இப்போது அதன் மீது நடவடிக்கை எடுப்பது சரியாக இல்லையே. எங்கேயோ இடிக்கிறது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

மேலும் அவர்கள் விவாதிக்கும் போது பலரும் கவனிக்க மறந்த ஒரு விசியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த வாரம் கமல்ஹாசன் பேசி கொண்டிருந்த போது சரவணன் குறிக்கீட்டு உள்ளார். அப்போது இவர் இவன் கோர்த்து விடுகிறார் என்பது கூறியது போல மெல்லிய சத்தம் கேட்கிறது.

இது மக்கள் கூர்ந்து கவனிக்கவில்லை என்றாலும் கமல்ஹாசன் நிச்சயம் கவனித்து இருப்பார். இது குறித்து அவர் பிக் பாஸ் குழுவினருடன் புகார் கூறியிருப்பார் என கூறப்படுகிறது.

இதனால் தான் இந்த நடவடிக்கை, பெண்களை இடித்ததற்காக என்று கூறுவது வெத்து காரணம் என கூறி வருகின்றனர். உண்மை என்ன என்பது அவர்களுக்கு தான் தெரியும்,


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.