கவின் சாக்ஷியுடன் பிரேக் அப் செய்துவிட்டு லொஸ்லியாவுடன் நெருங்கி பழகி வந்ததை சாக்ஷியால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இதனால் தான் சாக்ஷி நேற்று பாத்ரூமில் சென்று அழுதுகொண்டிருந்தார். இந்த பிரச்சனையை தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவர் முன்னிலையும் இன்று நடந்தது.
தற்போது வெளிவந்துள்ள இந்த ப்ரோமோ வீடியோவில் ரேஷ்மா சாக்ஷிக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவிக்கிறார். அதாவது, நீ பிரேக்கப் ஆன அடுத்த நிமிஷமே அடுத்த பொண்ணோட நெருங்கி பழகியதை சாக்ஷியால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என கூறுகிறார். பின்னர் தர்ஷன் நைட் 2 மணி வரைக்கும் லொஸ்லியாவோடு என்ன பிரண்ட்ஷிப் வேண்டிகெடக்கு என கேட்க கவினுக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் திருதிருன்னு முழிக்கிறார். பின்னர் லொஸ்லியா தனியாக சென்று கண்கலங்கி அழுகிறார்.
ஆக நிச்சயம் இந்த வார இறுதியில் இந்த முக்கோண காதலுக்கு முடிவு கிடைத்துவிடும்.
#Day39 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/WRLv95q6UV
— Vijay Television (@vijaytelevision) August 1, 2019
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.