முதல் முறையாக தனது இரண்டு குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்ட சமீரா ரெட்டி!


வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனத்தைக் கொள்ளையடித்தவர் நடிகை சமீரா ரெட்டி. அதைத்தொடர்ந்து வெடி, அசல், வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த அக்ஷய் வர்தே என்கிற தொழில் அதிபரைக் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளார்.

https://www.instagram.com/p/Bz7aNMiHU8F/

அதைத்தொடர்ந்து 4 ஆண்டுகள் கழித்து சமீரா தற்போது மீண்டும் ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகியுள்ளார். கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் இவர் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியாகப் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களிடம் வசமாகச் சிக்கினார்.

https://www.instagram.com/p/B0KlRiyHq81/?utm_source=ig_embed

இந்த நிலையில் தற்போது தனது குழந்தை புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார். அவரின் மகன், பிறந்த குழந்தையின் முகத்தில் கை வைத்து ஆசையாக பார்ப்பது போல் உள்ளது. மேலும் அதில், ‘முதல் பார்வையில் காதல். அவன் அவளை மிகவும் கவர்ந்தான்! இது மிகவும் இனிமையானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.