சற்று முன் பிக் பாஸ் வீட்டினுள் நுழைந்த போலீஸ்.! வனிதா கைதா?

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வனிதாவை கைது செய்ய தெலுங்கானா போலீஸ் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நடிகையும் நடிகர் விஜயகுமாரின் மகளுமான வனிதா, ஆனந்த்ராஜ் என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து பின்னர் 2012ஆம் ஆண்டு கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஜோவிதா என்ற மகள் உண்டு என்பதும் அவர் தந்தை ஆனந்த்ராஜூடன் தெலுங்கானாவில் வசித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு மகள் ஜோவிதாவை வனிதா சென்னைக்கு அழைத்து வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து வனிதாவால் தனது மகள் கடத்தப்பட்டதாக ஆனந்த்ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருப்பதை அறிந்த தெலுங்கானா போலீசார் வனிதாவை கைது செய்ய தமிழக போலீசாரின் உதவியை நாடியதாகவும், தமிழக போலீசாரின் ஒத்துழைப்புடன் தெலுங்கானா போலீசார் பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததாகவும் உறுதி செய்யப்படாத செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வனிதாவிடம் வெறும் விசாரணையா? அல்லது கைது செய்யப்படுவாரா? என்பது இனிமேல்தான் தெரியும்

இருப்பினும் கடந்த 2017ஆம் ஆண்டு கொடுத்த புகாருக்கு 2019ஆம் ஆண்டு விசாரணை செய்ய போலீஸ் வந்திருப்பது சில சந்தேகங்களையும் எழுப்பி வருவதாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியை மேலும் விளம்பரப்படுத்த பிக்பாஸ் குழுவினர்களின் ஸ்கிர்ப்ட்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.