பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபல நடிகரின் மனைவி..?

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது துவங்கும் என்று தான் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். தமிழில் வரும் 23ம் தேதி துவங்குகிறது.

குறித்த நிகழ்ச்சியானது தெலுங்கிலும் தொடங்கவிருக்கிருக்கிறது.

இந்நிலையில், தெலுங்கு பிக்பாஸில் யார் பங்கேற்கிறார்கள் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன.

அதன்படி, நடிகர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய் பங்கேற்கிறார் என நேற்று செய்தி பரவியது.

அது பற்றி அவரிடம் கேட்டதற்கு, “நான் பிக்பாஸில் போட்டியாளராக செல்ல மாட்டேன். தற்போது என் அடுத்த படத்திற்காக கதை எழுதி வருகிறேன். மீண்டும் நடிக்கவும் உள்ளேன்.

பிக்பாஸ் தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்தால் அதை ஏற்றுக்கொள்வேன். இது ஹிட் ஆன ஷோ. அதனால் நான் தொகுப்பாளராக சென்றால் என் திறமையை வளர்த்துக்கொள்ள உதவும்” என ரேணு கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.