தொகுப்பாளினியிலிருந்து புதிய அவதாரம் எடுத்த விஜே மணிமேகலை… மறக்க முடியாத அனுபவம் என நெகிழ்ச்சி

சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக இருந்து அதன் பின் நடன இயக்குனர் ஹுசைகனை காதலித்து வந்தார்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அதையும் மீறி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் மணிமேகலை, விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது கலந்து கொண்டு வருகிறார்.

அதுமட்டுமின்றி தற்போது பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதால், மிகவும் சிக்கனமாக இருப்பதாகவும், வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டிருப்பதாகவும் மணிமேகலை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

https://www.instagram.com/p/ByKa8W2HBcc/

இந்நிலையில் தொகுப்பாளினியையும் தாண்டி புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். அது ஒன்றுமில்லை பட்டி மன்ற பேச்சாளராக மாறியுள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் ஒரு பட்டி மன்ற பேச்சாளராக மாறிவிட்டேன், உலகெங்கும் தமிழை வளர்ப்பதில் மிக முக்கிய பங்கு வகித்த, வரலாற்று சிறப்பு மிக்க “மதுரை” மாநகரில் என்னுடைய முதல் பட்டிமன்றம் அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி நல்ல வரவேற்பு கொடுத்த மக்களுக்கு நன்றி மறக்க முடியாத சிறந்த அனுபவம் என்று குறிப்பிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.