இப்படி எதுக்கு நடிக்கணும்; நந்தினி சீரியலில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை!

நம் அனைவரது இல்லங்களிலும் தொலைக்காட்சி காலடி எடுத்து வைத்த நாளில் இருந்து, அதையே கதி என்று இருந்து வருகிறோம். அதில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு அடிமை ஆகாதாவர்கள் யாரும் இல்லை என்று கூறும் அளவிற்கு, ரசிகர்கள் அதிகரித்து விட்டனர்.

தங்கள் இல்லத்தில் நடக்கும் விஷயமாக, சீரியலில் வரும் கதையை எடுத்துக் கொள்கின்றனர். அவற்றில் ஏதேனும் பிரச்னை என்றால், தங்களுக்கே நேர்ந்தது போல் துடிதுடித்து போய் விடுகின்றனர்.

கன்னட மொழியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் ‘நந்தினி’. இதை ரமேஷ் அரவிந்த் தயாரிக்க, நிதின் இயக்கி வருகிறார். 600 எபிசோடுகளைக் கடந்து, கன்னட மக்களின் இல்லங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கன்னட மொழி சீரியல்களில் டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் நந்தினி சீரியலில் இருந்து நடிகை காவ்யா திடீரென வெளியேறியுள்ளார். தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேடம் இல்லை என்றும், அதன் காரணமாக சீரியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

இதனால் வருத்தமடைந்த படக்குழு, அவருக்கு பதிலாக வேறொருவரை தேடி வருகின்றனர்.