தேர்தல் முடிவுகளால் கமலை கலாய்த்த இயக்குனர் – யாருனு நீங்களே பாருங்க.!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பை தாண்டி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி அரசியலில் இறங்கியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் களமிறங்கி இருந்தது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

சில இடங்களில் மட்டுமே நல்ல வாக்குகளை பெற்றிருந்தன. இன்னும் ஒரு சில இடங்களில் மோசமான அளவிலும் வாக்குகள் பதிவாகி இருந்தன.

இது குறித்து இயக்குனரும் தயாரிப்பாளருமான சி.வி குமார் தன்னுடைய ட்விட்டரில் போ… போ… எல்லாம் முடிஞ்சருச்சு போ… உடைச்ச டீவிய ஓட்ட வச்சு பிக் பாஸ பாக்கலாம் போ என கமல்ஹாசனை கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.