திருமணத்திற்கு பின் ஆர்யா-சாயிஷா எடுத்த அதிரடி முடிவு!

நடிகர் ஆர்யாவுக்கும் நடிகை சாயிஷாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் திருமணத்திற்கு பின் முதல்முறையாக ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘மிருதன்’ மற்றும் ‘டிக் டிக் டிக்’ படங்களை இயக்கிய இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கும் அடுத்த படம் ‘டெடி’. இந்த படத்தில் ஆர்யாவும் சாயிஷாவும் ஜோடியாக நடிக்கவுள்ளனர். ஏற்கனவே இருவரும் ‘கஜினிகாந்த்’ படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/StudioGreen2/status/1131438551088766976

ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.