நீங்கள் கொடுத்த இந்த உயிரை நீங்களே எடுத்துக்கொண்டு ஏன் சந்தோஷமாக வாழக்கூடாது? ஸ்ரீ ரெட்டி!

நான் உங்களுக்கு கொடூரமான தண்டனையை கொடுத்துவிட்டேன் என்று நடிகை ஸ்ரீரெட்டி அன்னையர் தினத்தில் மனம் வருந்தி கூறியுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் நடிகர்கள் என்று பார்க்காமல், பலர் மீது பாலியல் குற்றம் சாட்டி வந்தார். அதோடு இல்லாமல், கோலிவுட் பக்கமும் கவனம் செலுத்தி பி ரபல நடிகர்கள் மீது பாலியல் குற்றம் சாட்டினார். ஒருகட்டத்தில் சென்னையில் வந்து குடியேறினார். இந்த நிலையில், அன்னையர் தினத்தன்று தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டுள்ளார்.

உங்களது அம்மாவைத் தவிர யார் உங்களை கவனித்துக் கொள்கிறார்கள். நான் உங்கள் அதிக அன்பு வைத்திருக்கிறேன். அதே போன்று தான் நீங்களும் என் மீது அதிக அன்பு வைத்திருக்கிறீர்களா? என்னை பிள்ளையா பெற்றதற்கு என்னை மன்னித்துவிடுங்கள். என்னைப் போன்று ஒரு பிள்ளையை யாரும் பெற்றுக்கொள்ள விரும்பமாட்டார்கள். ஆமாம், உங்களுக்கு பிள்ளையாக பிறந்து கொடுமையான தண்டனையை நான் கொடுத்துவிட்டேன். இதுவரை நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை. பலரும் உங்களைப் பற்றி தவறாக பேசுகிறார்கள். இப்பவும் ஒரு நடனபிணமாக நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

எனக்காக இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறீர்கள். எதற்காக இவ்வாறு செய்கிறீர்கள். என்னால், பலரும் உங்களை குற்றம் சாட்டுகிறார்கள். என்னுடைய அம்மாவே உங்களுக்காக நான் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் கொடுத்த இந்த உயிரை நீங்களே எடுத்துக்கொண்டு ஏன் சந்தோஷமாக வாழக்கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.