நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மான்ஸ்டர்’. இந்தப் படத்தில் எலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. ‘மான்ஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
https://www.instagram.com/p/BxOqWi3DC9f/
இதில் கலந்து கொண்டு பேசிய பிரியா பவானி ஷங்கர், நானும், எஸ்.ஜே.சூர்யா படத்தைப் பார்த்து வளர்ந்தவள். அதன் காரணமாக தொடக்கத்தில் பயம் இருந்தது. இந்தப் படத்தில் தைரியமாக நடிக்கக் காரணம் இயக்குநர் தான் என்று கூறினார்.
https://www.instagram.com/p/BxOq24VDJnr/
இதையடுத்து பேசிய எஸ்.ஜே.சூர்யா, நான் பல புலிகளுக்கு வில்லனாக நடித்துவிட்டேன். இந்தப் படத்தில் எலியுடன் நடித்திருக்கிறேன். படம் சிறப்பாக வந்துள்ளது. மிகவும் திருப்தியாக இருக்கிறது.
பாடல் காட்சிகளில் பார்க்கும் போது, பிரியா பவானி சங்கர் குடும்ப குத்துவிளக்காக அழகாக இருக்கிறார். இந்தப் படத்தில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.